Tuesday, December 18, 2007

அபலையாக...



சுகமான குயில்நாதம்
சோகமாக வரக்கண்டேன் ...
ஏகாந்த வேளை அது ...
ஏறெடுத்து பார்த்திட்டேன் ...

ஆதரவாய் செவிசாய்த்தே...
அருமை குயில் கதைகேட்டேன் ...
கானக்குயில் வார்த்தையிலே
கதைகள் எல்லாம் கண்ணீராய் !!!...

சின்ன சின்ன ஆசைக்களும் ...
சிறிதான கனவுகளும் ...
பூத்திடவே தவம் செய்த
ஜோடிக்குயில் மறைந்த கதை !!!...

அன்றொருநாள் இரை தேட
ஆண்குயிலும் போனவேளை
அடங்காத பசியோடே
ஆர்பரித்த காட்டு தீயும் ...

கண்ணிமைக்கும் நொடியினிலே
எரிந்துபோன மாயம் என்ன ..
என்னவளின் கனவுகளும்
இமைமூடா நினைவுகளும் !!!...

சொன்னதுவே சோகமாக
ஆண்குயிலும் அழுகையோடே ...

கடந்துபோன இன்பங்களும் ..
விரகத்தின் துன்பங்களும்...
துணையாகி போனதுவே
ஆண்குயிலின் இரவுகளில் ....

வசந்தங்கள் வந்திடலாம் ...
பூக்களதும் பூத்திடலாம் ....
மறந்துவிட முடிந்திடுமோ
குயிலதனின் முதல்ராகம் !!!...

இதமாக தலை சாய்க்க
இடம் கொடுத்தேன் என்மடியில்...
அதன் கார்விலகி கவலைமாற
கடவுளிடம் தொழுது நின்றேன்

அபலையாக...

Monday, December 10, 2007

உறங்காத மௌனம் ...


இதயத்தின்
இதழ்களை
இதமாக வருடி,....
அலை அலையாய்
கேள்விகள்
அடங்காமல் எழ ,...
பதில் ஒன்றும் சொல்லாமல்
எங்கே மறைந்தாய் ?....
என் உயிரே,...

ஆயிரம்
கரங்கள் கொண்டு
அணைக்க துடிக்கிறதே
சோகம் ,...
சூரிய கதிர்களாய்
மனதை ,...

கவிதை மழை
பனியாய் தழுவ
தேடி தேடி....
தேங்குதே நெஞ்சம்
பூஞ்சோலையாம் !!!...
உனை காண ,..

அலைபாயும்
காற்றாய்
என் துயரம்,...
ஆதரவாய் இன்றும்
உறங்காத
உன் மௌனம் ,...

Friday, December 7, 2007

மறந்தாலும் ,...


இமைகளை
மூடினால் உன் பிம்பம் !!!,...
இதழ்களோ ,...
உன் பெயரை மட்டுமே
உச்சரிப்பேன் என்கிறது !!!,...

உன்
கவிதைக்களுக்கு மட்டுமே
என் காதுகள்
கவனம் கொடுக்கின்றன ,....

காணாமல் போகிறதே
இவ்வுலகம்
கண்முன்னில்
" கண்ணா " என்ற உன்
காந்த அழைப்பில்,..

ஏன் இத்தனை !!!....
என் சுவாசத்தை
கொஞ்சம்
வாசித்து பாரட,..
வாசமாய் வீசும்
உந்தன் நினைவே
எந்தன் மூச்சாய்,..

உளம் துடிக்க
மறந்தாலும் ,...
உயிர் எரியும்
ஜோதியாய் !!!... என்றும்
உனை பிரகாசிக்க
தீபமாய் !!!,...

Tuesday, November 27, 2007

ஆயுள் கைதி,....




உனக்காக
காத்திருக்கையில்.....

நகராத நாட்கள்....
நீங்காத நேரங்கள்...
குறையாத மணித்துளிகள்....
அத்தனையும்
சொல்கிறது பெண்ணே !!!...
"கவிதையான நிலவுக்கு"
காத்திருக்க வேண்டுமாம் ...

கண்டதும் காதல் ...
இல்லை !!!.. இல்லை !!!....
காணமலும் காதல் வரும் ...
ஆதாரம் கேட்கிறார்களா ?..
அனுப்பிவை என்னிடம்....

சிணுங்கல்களால் எனை
சிறை பிடித்தவளே,....
விடுதலையே வேண்டாம்..
அடைத்துவிடு மனக்கூட்டில் ....
"ஆயுள் கைதியாய் "
தீர்ப்பும் சொல்லி !!!....

Monday, November 19, 2007

என்னவனே ...



என்னவனே ...

அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

Monday, November 12, 2007

அந்த நாள் வரை ,...



மார்கழி பனியில்
அதிகாலை பூக்கள் ,...
சித்திரையில்
பௌர்ணமி நிலவு...
மரத்தில் மாங்கனியோடு
அணீலின் கொஞ்சல் ...

கூட்டமாக பறக்கும்
தேசாடன பறவைகள்...
கரையோடு காதல்தீரா
அலையோசை...
வான்மகளின்
முகம் சிவந்த வெட்கம்,...

சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...

காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...

Sunday, November 11, 2007

என் காதல்,...


என்னவளே !!!...
உன் இதயத்தை
நானும்
தடவிக்கொண்டும்...
வருடிக்கொண்டும்...
புரியமாட்டேன்
என்கிறது பெண்ணே !!!
குருடனுக்கு கிடைத்த
மோனோலிஸா ஓவியமாய்...!!!!....

தேடி தேடி கால்கள்
தேய்ந்தது தான் மிச்சம் !!!...
அகராதியே கிடைக்கவில்லை
உன் மௌனத்தின்
அர்த்தம் பார்க்க...!!!...

ஊமை கண்ட
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
ஊர் அறிய ஆசை இல்லை !!!...
ஊன்றுகோலாய்....
நீ உணர்ந்தால் போதுமடி..!!!

எழுத மறந்த டைரி,....






எனது
இனிய தோழர்களே !!
இது கவிதை அல்ல ஒரு சிறு கதையாக
நினைத்து படிக்கவும்.....
அன்புடன்
விஷ்ணு.....


என் நினைவுகள்
பின்னில் நடக்க
நினைத்து பார்க்கின்றேன்,...
வாசலின் ஓரம்..
தணல் தந்த மாமரம்...
உதிர்ந்து கிடந்த மாம்பூக்கள்...
இரை என பூக்களை
சிறை பிடித்த கோழிகள் ...
சிலிர்த்துக்கொண்டு துப்பியதும்...
சிறு தூறல் மழையில்
தாகம் தீர்க்க வந்த காகங்கள்
கோழியின் கொஞ்சல் கண்டு
ஓடியதும் என் மனதில்
இன்றும் மறையாமல் இருக்கிறது....

அன்று நீ...
மஞ்சள் பாவாடையும்
கருப்பு சட்டையுமாய்...
ஒய்யாரமாக நடந்து வர...
இடப்புற கோழிக்கூண்டல்லவா
எனக்கு அடைக்கலம் தந்தது
உனை கடை கண்ணால் பார்க்க....
அன்று எனை கண்டு
அத்தே !!!!! ... என்று அலறியதையும்
நானும் மறக்கவில்லை....
கோவில் குளத்தில்
குளித்தெழுந்த எனது
அரைகுறை ஆடையும்...

நீ...
சைக்கிள் ஓட்டி
படிக்கவேண்டும் என்றாய்...
நானும்
மெயின் ரோட்டில்
பழனி அண்ணன் கடையில்
காவலாய் காத்திருந்து
உருட்டிக்கொண்டு வந்தேனே
சைக்கிளை உனக்கு சொல்லித்தர ...
அன்று மாலைவரை
சைக்கிளை நீ மிதிக்க
விழாமல் இருக்கவே
இருக்கைக்கு பதில்...
உன் இடுப்பை
எத்தனை முறை பிடித்தேன்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த விசயம்...அதை
இன்றும் என் நெஞ்சிலே
இன்ப நினைவாய் கொண்டு நடக்கிறேன்...

அடுத்த
ஐந்தாரு நாட்கள்
உனை ஆளையே காணவில்லை...
பார்க்க வரலாம் என்றால்..
அந்த பக்கமே போகாதே !!!..
அம்மாவின் ஆணை...
அன்று சைக்கிள் ஓட்டுக்கையில்
இரண்டு முறை கீழே விழுந்தாய்
ஏதாவது அடிபட்டதோ?
என்னிடம் சொல்லாமல்
மறைத்து விட்டாயோ?
தெரியவில்லை...
என் மனமோ
அந்த வாரம்
முழுவதும் சஞ்சலத்தில்....

அடுத்த நாள்
அம்மாவும் பக்கத்துவீட்டு
கனகக்காவும்
மாடு கழுவ வரும்
பேச்சிமுத்துவும்
குசுகுசுக்கும் ஓசை ...
உன்னை பற்றியோ
சந்தேகம் வர
காது கொடுத்தேன் ...
ஒன்றும் புரியவில்லை.....
சாப்பாடும் இறங்கவில்லை
சாப்பிடவும் பிடிக்கவில்லை ...
யோசித்து பார்த்தேன்....
மீண்டும் சந்தேகம்....

பழனியாத்தா பேத்தி
குருவம்மாவுக்கு
பேய் பிடிச்சதா சொன்னாங்க
அது ஏதாவது...
ஒண்ணுமே புரியல ...
பிள்ளையார் கோயிலுக்கு
நாளைக்கு போகணும்....
நினைத்துக்கொண்டு
படுத்துவிட்டேன்...

காலையில்
பிள்ளையாரைதொழுது
அம்மாவிடம்
கணக்குநோட் வாங்க
ராசு வீட்டுக்கு போகிறேன்
பொய் சொல்லி
நடையை கட்டிவிட்டேன்
உன் தெருவுக்கு...

ராசுவை கண்டு
"ஏன்டா செல்விக்கு என்னாச்சு ?"
என்ற போது
"எனக்கு தெரியாது என்றான்"...
அவுக வீட்டிலே நெறய
உறமுற வந்திருக்காக .....
எட்டிபாரடா என்று எப்படி சொல்லியும்
முடியாது என
முடிவாக சொல்லிவிட்டான் ...

மரப்பேட்டை
சேட்டு கடையில்
வாங்கிய பம்பரம்
பாக்கெட்டில் இருந்தது (30 காசு)
தானமாக அதை கொடுத்து
உன்னை பார்த்து வர சொன்னதை
நினைத்து பார்க்கிறேன்...

கரிசனம் என் மீதோ.....
இல்லை... உன் மீதோ தெரியவில்லை
ஓடி வந்து சொன்னான்
"டேய் செல்வியை உக்காற வச்சிட்டாங்கலாம் ".....
யாரோ இருவர்
பேசி கொண்டதில்
கிடைத்ததை எனக்கு கொட்டினான்...
புரியவில்லை இருந்தும்
யோசித்து பார்த்தேன்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்....
யாரிடம் கேட்பது என
தெரியவும் இல்லை....
அன்றும் தூங்கவில்லை....

ஒரு வாரம் முடிந்திருக்கும்
நீயும் கருவாச்சி
பூங்கொடியும்
கோவிலுக்கு போவதாக...
சொன்னது...
ரெட்டத்தலை பாண்டி...
ஓடோடி வந்தேனே உனை பார்க்க...
ஞாபகம் இருக்கிறதா உனக்கு ?
புதிதாய் தெரிந்தாய் !!!...
உன் உடையில் மாற்றம் !!!...
உன் நடையில் மாற்றம் !!!...
உன் பார்வையில் மாற்றம் !!!...
எல்லாம் மாறி விட்டது
அடிக்கடி என் வீட்டிற்க்கு வரும் நீ ....
அத்திப்பூத்தாற் போலேவர தொடங்கினாய் ...
என் முகத்தை நேரில் பார்க்க மறுத்தாய் ...

"நீ மறைந்திருந்து பார்ப்பது போல்
நானும் உணர தொடங்கினேன் "...!!!...

எழுத மறந்த டைரி..... 2 பாகம்





அன்று
ஒன்பதாம் வகுப்பில்
நாம் இருக்கும் இறுதி நாள்
இனி நான்கு நாட்கள் விடுமுறை
அது முடிந்தால் முழுப்பரிட்சை ...
வரும் போதேமூர்த்தியிடம்
சொல்லி இருந்தேன்
அவன் எனது நெருங்கிய தோழன்
உனக்கு தெரியும்
ஆனால்
அவனை பற்றி தெரியாத
ஒரு விசயம் ...
அவனுக்கு ரா,ரு,ரே என்ற
உச்சரிப்பு வராது
அவன் பெயரையே
அவன் திகுமூர்த்தி என்பான் ...
திருமூர்த்தி அப்படி
உருமாரும்
அவன் உச்சரிப்பில்....
ஆனால் மிகவும் நல்லவன் ..
அவன் வேண்டாம் என்று சொல்லியும்
முடிவெடுத்தேன்
உன்னிடம் பேச ...

காலையில்
இன்டர்‌வ்ல் மணி அடிக்க
நீயும் கருவாச்சியும் ( பூங்கொடி)
எப்பவும் நிற்கும் வேப்பமரத்தடிக்கு
அவனையும் இழுத்துக்கொண்டு
வந்ததை நினைத்து பார்க்கின்றேன்...

உன்னை நெருங்குகையில்
நெஞ்சம் கொஞ்சம் படபடத்தது...
மனதில் தைரியத்தை வரவழைத்து
உன்னிடம்சொல்லியே ஆகவேண்டும்
என்ற உறுதியில்
உனை நெருங்கினேன்
நெருங்க நெருங்க சிறிது வேர்த்தது ...
என்னை நானே சபித்துக்கொண்டேன்...
லெட்டர் ஆவது எழுதியிருக்கலாம்
அப்போது தோன்றவில்லை ...

நான் சொல்லவேண்டும் என
நினைத்ததை முக்கியமாக
சொல்ல மறந்து ..பேசவேண்டும் என்பதுபோல்
ஏன் என்னிடம் பேசுவதில்லை ?...என்றேன்..
நீயோ.... அப்புறம் இப்புறம் பார்த்துவிட்டு
ஒன்றுமில்லை என்று
உள்ளுக்குள் சிரித்ததை
உணர்ந்துகொண்டேன்...

அதற்குள் பள்ளிமணி அடிக்க
இனி நின்றால் தண்டபாணி வாத்தியாரின்
தடி அடி கிடைக்கும் ...
ஓடிவிட்டேன் உனை விட்டு.....

வகுப்பில்
நான் மூர்த்தியை
தொண தொனத்துக்கொண்டு
இருந்ததை நினைத்தால்
இப்பவும் சிரிப்பு தான் வருகிறது ...
பள்ளி விட்டு செல்கையில்
நீ என்னுடன் வர வேண்டும் ..
இதற்கு யோசனை கேட்டால்
சொல்ல தெரியாமல் முழிக்கிறான்...
நீண்ட இடைவேளைக்கு பிறகு
இருவரும் சேர்ந்து நல்ல முடிவெடுத்தோம்,...

தினமும்
மதியம் பள்ளி எதிரில்
மணியாச்சி கடையில்
டீ வாங்கி வரச்சொல்லி
தமிழ் ஐயா என்னை அனுப்புவது
உனக்கு தெரியும் அல்லவா ...
இன்றும் அனுப்பினால் வசதி...
சாமியை வேண்டி காத்திருந்தேன்
வாத்தியார் வருக்கைக்கு ....

இரண்டாவது பெல் அடிக்க
தமிழ்வாத்தியார் தொடங்கினார்
தமிழ் பாடத்தை... கோடானுக்கோடி கொடுத்தேனும் ....
தொடங்கி உண்ணாமை கோடியுரும்...
கடைசிகோடிக்கு வந்துவிட்டார்...
இனியும் டீ வாங்க மட்டும் சொல்லவில்லை...
வரிசையாக மயில்சாமி ..
அர்ச்சுனன் ,மூர்த்தி, ராசு, என
ஒவ்வொரு கோடியாக கேட்டு ..இறுதியில்
ரெட்டமண்டை பாண்டியில் வந்து நிறுத்தினார்...

இதற்கிடையில்
அவரது கை பாக்கெட்டில்
தேடுவதை பார்த்த போது
மனம் மகிழ்ச்சியானது....
பிரார்த்தனை வீண் போகவில்லை ...
இப்போது பெல்அடித்து விடுவார்கள்
உடனே காரியத்தை முடிக்கவேண்டும்...
சில்லரையை வாங்கிக்கொண்டு ஓடினேன்
உன் சைக்கிளை தேடி வேப்பமரத்தடிக்கு...

உனது சைக்கிளை வேகம்
அடையாளம் காண முடிந்தது
புதியது அல்லவா... அடுத்து சென்று
பின் சக்கரத்தின் காற்றை விடுதலை செய்தேன்....
வேலை முடிந்து திரும்புகையில்...
ஓவிய மாஸ்டர் மாணிக்கம்....
உடனே தமிழ் ஐயா தந்த
சில்லரையை சிதற விட்டு
தேடுவது போல் பாசாங்கு
செய்து நழுவி விட்டேன்...
வேலை முடிந்தது..ஆனால் மனம்..
அலைப்பாய தொடங்கியது...

நீ... சைக்கிளை உருட்டிக்கொண்டு
என்னுடன் வர வேண்டும் ....
நான் என்னவெல்லாம்
உன்னிடம் பேச வேண்டும் ...
நிறைய சினிமா காட்சிகள்
மனதில் வந்தது... அன்பே வா,...16 வயதினிலே ...
நேற்று பார்த்த கிழக்கே போகும் ரயில் என
பலவும் மின்னி மறைந்தன உள்ளத்தில் ...
எதுவும் சரியாக தோன்றவில்லை ...
நேரமும் நெருங்கி விட்டது

4.15க்கு இறுதி மணி...
நீ போய் சைக்கிளை
எடுக்கட்டும் என காத்திருந்தேன்...
மூர்த்தியிடம் இன்று மயில்சாமி பின்னால்
போக சொல்லிவிட்டு உன்னுடன்
நான் நினைத்தபடி சைக்கிளை
உருட்டிக்கொண்டு நடக்க
முடிவு செய்தேன்.....

நீ சைக்கிளை எடுத்து முன்னால் நடக்க
நான் மெதுவாக பின்னால் தொடர்ந்தேன்...
நமது ஊருக்கு இரண்டு மைல்தூரம்
செல்லவேண்டும் என நினைத்த போது
மனம் துள்ளி குதித்தது....
அத்தனை தூரம்... அத்தனை நேரம்...
உன்னுடன் ,
உன்னை பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருக்கலாம் என்றபோது
ஆனந்தம் நெஞ்சில்
அலை பாய தொடங்கியது....

உன் அருகில் நெருங்கி என்ன? என்றேன் ....
நீயோ... சைக்கிளில் காற்று இல்லை என்றாய்..
சரி காற்றாக நான் இருக்கிறேனே
உனை தூக்கி செல்ல...
மனதில் நினைத்துக்கொண்டு...
நானும் மெதுவாக உன்னுடன்
நடக்க தொடங்கினேன்...

அன்று நடந்த நமது
உரையாடல்களை இன்றும்
உருப்போட்டு பார்ப்பதில்
எத்தனை மகிழ்ச்சி தெரியுமா?...
அன்று எனக்கு உன்னுடன் நடக்க
உதவியது உனது மாமா தானே..
எதிரில் வந்த அவர் என்னிடம் பத்திரமாக
வீடு வரை கொண்டுபோய்
விடவேண்டும் என்று சொன்னது
எத்தனை வசதியாகி விட்டது..
நினைத்து பார்க்கிறேன்....

என்னை பிடிக்கவில்லையா ?....என்றேன் நானும்...
நீயோ....பிடித்து விட்டாயே உடும்பாக என்றாய்....
நீ அழகாய் இருக்கிறாய் என்றேன்....
நீயோ....உன்னோடு நிற்கையில் தானே என்றாய்...

உன் சிரிப்பு எனை மயக்குதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே சிரிக்கிறேன் என்றாய்....
உன் பார்வை மின்னலாய் தாக்குதே என்றேன்...
நீயோஇமையாக மாறி அணைத்திடவா உனை என்றாய்..

உன் இதழ்கள் எனை இழுக்கிறதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே அது இதழ் விரிகிறது என்றாய்...
உன் பேச்சு எனை மயக்குது என்றேன் ...
நீயோ....உன் மார்பில் மயங்கவே பேசுகிறேன் என்றாய்...

உன்னை கட்டி பிடிக்க ஆசை என்றேன்...
நீயோ....உன் கண்கள் எனை காயப்படுத்துகிறதே என்றாய்...
உன் நடை அழகான நடனம் என்றேன்...
நீயோ....அரங்கேறும் நாள் பார்க்க ஆசை என்றாய்...

இதயத்தில் எனக்கு இடம் தருவாயா என்றேன்...
நீயோ....உள்ளே...
கோட்டை கட்டி குடும்பம் நடத்த தெரிகிறது....
வெளியில் மட்டும் என்ன பாசாங்கு ?.. என்றாயே !!!!

என்ன பார்க்கிறாய் ? .....
இது எதுவும் நாம்
இருவரும் பேசவில்லையே
எனத்தானே....
அடி பெண்ணே.. !!!...
உனக்கு தெரியாது....
அன்று நீ பார்த்த பார்வையும் !!!...
பிடித்திருக்கிறது என்று சொன்ன
ஒரு வார்த்தையும் தான்..!!!!...
இன்று என் மனதை
இப்படி எல்லாம்
அசை போட வைத்தது....
என் அன்பே.!!!
      - விஷ்ணு 

Monday, October 1, 2007

வானம்பாடி.....


எழுதா
ஓவியமாம்...
என் இதய புத்தகத்தின்
எல்லா பக்கத்தையும்
அழியா காவியமாய்
அடைத்துக்கொண்டாயே..!!!!

நானும்....
அழிக்க தெரியாமல்
அலைகின்றேன்......
குரல் இழந்த வானம்பாடியாய்
சிறக்கொடிந்து !!!!.....

Sunday, September 30, 2007

நீ...



அரங்கேறத் துடிக்கும்
பரதத்தின்
அபிநய முத்திரைகளோ !!! ....
எண்ண தோன்றுகிறது
பெண்ணே .....
உன் இமைகளின்
அசைவு என்னை....!!!..

என்னவளே ...
இரும்பாக
இருந்த நானும்... சிறு
துரும்பாக
இளைத்துவிட்டேன்...!!!
இனியும் இழுக்காதே...
"காந்தமாம்"
உன் கருவிழிகளை காட்டி !!!....

தாயின்
அழைப்புக்கு வேகம் ...
தவழ்ந்து வரும் மழலை...
புரியவில்லை......
உன் தலையாட்டகளைத்தான்
சொல்கிறேன்...
என் இளம் தளிரே....

நாளைக்கு
மீதி வைத்து ...
பாதியிலே
நிறுத்துகின்றேன்....
ஏன் என்கிறாயா ?...
காத்திருக்கும் சுகத்தை
நீயும்
காணவேண்டும்...!!!... என் கண்ணே...

Friday, September 28, 2007

ஜனனம்.....


என்னவளே !!!..
நாம் காதலுக்கு
முன்னுரை எழுதும் முன்
முடியுரை எழுத துடிக்கிறார்கள்...


இது தொடர்கதையா?...
இல்லை.....
முன்னுரை இல்லா ஒன்றின்
முடியுரையா ?....

எல்லாம் உன் கையில் !!!...
என்னை பொருத்தவரை...

"தினமும் தானே மரணம்"
என் உயிர் வாழ்க்கை ஜனனம் ... !!!...

Thursday, September 27, 2007

மகா காவியம்.....


என்னவளே ....
காவியம் எழுத
அழகான வார்த்தைகள்
ஆயிரம் வேண்டும்....
யோசித்து பார்க்கிறேன் !!!..

"மகாகாவியமாம் "..!!!...

உன்னை
எழுதிய
பிரம்மனின்
இன்னல்களை....

Wednesday, September 26, 2007

குரு ,....


என்னவளே......

கவியரசு
கம்பனுக்கு
புதுக்கவிதை
எழுத ஆசை !!!..
என்னிடம் வந்தான்,...
அனுப்பிவிட்டேன்
உன்னிடம்...
நீ தானே எனது குரு ,....

காமம்....


இளமைகளின்
இறுக்கம் ...
இருக்கும் வரை
நெருக்கம்....

நெருங்கியபின்
இறக்கம்....
இறங்கியபின்
வெறுக்கும்....

அன்பு.....


அன்பு ...

அழகான ஆயுதம் ...
"அமிர்தம்" போல் !!!..
அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....

"கவிநா"....






எனது

இனிய கவிதைத்தோழி....

"கவி" காக நான்

எழுதிய சில வரிகள்....

இனிமையானவள்......என்றும்
இளமையானவள்.......மனதில்...

இனியவள்
இவள் ஜன்னலோரம்
வந்துவிட்டால்
கடிகாரங்களுக்கு கூட
காய்ச்சல் வந்துவிடும் !!!....
நேரத்தை காட்ட
நினைவில்லை அவைகளுக்கு...!!..


நான்கைந்து வயதில்
பேச தொடங்கியவள்..
காற்றினோடும்
கடல் அலைகலோடும்.....
இவர்கள்
இருவர்க்கும் இடையே
மொழி பெயர்க்க
தென்றல் விழி வைத்து
காத்திருக்கும்......
இவள் வரும் ஜன்னல்
வழி பார்த்து.......


சில நேரங்களில்
ஓடங்கள் கூட
இவளிடம் கேட்பததுண்டு.....
நீ..
கடல் அலைகளையும் ,
காற்றையும்
கட்டி போட்டு விட்டால்
நாங்கள் கரை
சேர்வது எப்படி என,...
சிரிக்கின்றாள்,.....
சில நேரம் தனக்குள்ளே......


இவள்
நினைவுப் பறவை
சிறகடித்தால் அன்று
ஓவியங்கள் பல
ஊர்வலமே போகும்.....
ஜன்னலின்
திரை சீலை கூட
தானே சிரிக்கும்...!!!
வெட்கத்தால் தன் முகமே
தான் மறைக்கும்,....!!!...


இவள் மனம்
அழகான பூஞ்சோலை ,..
அது இன்று நேற்று
உருவானதல்ல
சிறு வயதில்
இவள் நட்ட நாற்றுகள்
வளர்ந்து இன்று
வண்ண பூன்சோலையாய்...
வாசம் வீசுகின்றன,..
வாசகர் இல்லா புத்தகமாய்,...


வாசிப்பவர் இல்லா ஓவியமாய்...
இவள் எழுத தொடங்கியது
எத்தனயோ
நாட்களுக்கு முன்னால்
நாட்கள் செல்ல செல்ல...
முதல் வாசகனை கிடைத்தது...
சகோதரியின் உருவத்தில்...
உற்சாகம் ஊட்ட ஆளில்லை
இருந்திருந்தால்
உயரத்தில் இருந்திருப்பாள்,..


நண்பர்கள் கூட்டத்தை
சிறைப்பிடிக்கவே
அன்பினால் ஆன
அரண்மனை அமைத்துள்ளால்...
அதில் அடைப்பட்டால்
தப்பி செல்ல மனம் வராது.....
தண்டனைகளோ !!!...
தவிர்க்க தோன்றா
நட்பின் போதை,..!!!..


இவள்
தாய் தந்தை
உடன் பிறப்பு என ..
அனைவரிடமும்
அன்பை அளித்து
அரவணைப்பை பெறுபவள்,..
ஆனால்
மனத்திற்க்குள் கொஞ்சம்
தனிமையில் வாழ்பவள்....


இவள்
இதயத்தில்
நண்பர்களுக்காகவே
நல்ல ஒரு இடத்தை
வேலி கட்டி வைத்துள்ளால்...அதில்
நாம்.... நமது.....
நல்ல நினைவுகளை
தைரியமாக விதைக்கலாம்.....
பசுமை மாறாமல் ...
என்றும் ஈரத்துடன் ...
காத்து வளர்ப்பாள்,...


இனிமையானவள் .....என்றும் !!!...
இளமையானவள் ...மனதில் !!!...

கற்பூர வாசனை ....


பௌர்ணமி
நிலவின் ஒளியை
நூலாக கோர்த்து
பட்டாடை செய்து வைத்தேன்......
நட்சத்திரத்தை எல்லாம்
முத்துக்களாய்
தைத்து விட்டேன்
முந்தானைக்கு அழகு சேர்க்க......
மல்லிகை பூவின்
மாநாடே நடத்தி விட்டேன்
சேலையில் சுகமான
மணம் சேர......

அழகான சேலை என்று
அக்கம் பக்கம் புரணி பேச....
காத்திருந்தேன் என்னவளின்
ஜென்ம தின பரிசளிக்க,....
பிறந்த நாளும் வந்தது !..
என்னவளும் வந்தாள் !..
பட்டாடை பொக்கிசத்தை
பவ்வியமாய் பரிசளித்தேன் !!!!....
பக்குவமாய் திறந்து பார்த்தாள் !!!....
கனல் தெரிக்கும்
அவள் பார்வையில்...!!!
சுருக்கென்று முள் தைத்தது
என் நெஞ்சில் !!!!.... அவள்
சுரிதார் போதுமென்று
சொன்ன போது !!!.....

பாட்டி சொன்ன பழமொழி ஞாபகம் வந்தது....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?,.....

கடன்....


என் வீட்டில்
மலர்களுக்கு பஞ்சம் !!!...
உன் கவிதை
மலர்களை கொஞ்சம் !!!...
கடனாக தந்தால்
என் நெஞ்சம் !!!...
மாறிடுமே உன்
மலர்களுக்காக மஞ்சம் !!!...

கடற்கரை.....


அன்று
கடற்கரையில் .....
உன் வெட்கம்
என் முகம்
பார்க்க மறுத்தபோது ......

நீ
உன் பாதம்
எனும் தூரிகையால்
முத்திரை பதித்த
சித்திரங்கள்
அழியாமல் இருக்க ,...
அந்த கடல் அலைகலையே
நிற்க சொன்னேன் ,.......

அவைகளோ
ஓரத்தில் ஒதுங்கி
ரசித்து விட்டு ஓடியதுவே ....
அவைக்களுக்கும் வெட்கமோ ? .....

காரணம் ......
உன் ஓவியமா ?.....
இல்லை
நமது ஊடலா ?....

சாபம்....



ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!...

பாசம்...



பணம்,.. காசு...
ஒன்றே இந்த தேசம்....
பாசம் என்பதெல்லாம்
பகல் வேசம்,...
குணம் என்று
சொல்வதெல்லாம்
வெறும் கோசம்,....
கொடுப்பதை நிறுத்தினால்
நீயும் படு மோசம் !!!,...

Tuesday, September 25, 2007

காதல்,.........



காதல்,.........
அன்பின் இருப்பிடம் அன்று....
எதிர்பார்ப்பின் உறைவிடம் இன்று.....

காதலி...
அழகாக வேண்டும்..
படித்திருக்க வேண்டும்...
சொல்லும் போதெல்லாம்
சொன்ன இடத்திற்க்கு வரவேண்டும்,...

காதலன்...
நல்ல வேலை, வசதி, அழகு,
வேறொரு பெண்ணையும் பார்க்க கூடாது
காதலன் வீட்டில்
ஆட்களோ அதிகம் வேண்டாம் !!!....
எதிர்பார்ப்புகள் தான்
எத்தனை... எத்தனை...

மனதை பார்ப்பதில்லை,..
உண்மை காதல்
உறங்கும் இடத்தை...
அழகு, அந்தஸ்தது, வசதி, வேலை...
எல்லாம் வெளி  வேசங்கள்,..
கலைந்து போகும் முகச்சாயங்கள் ...

இன்று
எல்லா காதலர்களும்
ஏமாற்றி கொண்டும்,
ஏமாறிக்கொண்டும்...
ஆண்கள், பெண்கள் என
அடையாளமில்லை..
எல்லாம்
"எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள்" !!!! ...
பத்து வயதில்
விளையாட்டு காதல்....
இருபது வயதில்
இனக்கவர்ச்சி காதல்...
இருபத்தைந்து வயதில்..
கொஞ்சம் பாதிப்பை
ஏற்படுத்தும் காதல்..


வாழ்க்கை துணையோடு
முப்பது வயதில்
உண்மை காதல்...!!!
முன்னோர் சொன்னது...!!!

சிறைபட்ட
காதல் தான்,...அதுவும் ...
விட்டுக்கொடுக்கவேண்டும்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்....
ஏமாற்றம் வெளியே தெரியாது ...
ஏமாந்தாலும்...!!!..

எல்லா வகையிலும்
கைவிலங்கிட்ட காதல்...!!!!...
"விட்டு கொடுத்தலால்
எதிர்பார்ப்பை கொன்றாலே"
காதலுக்கு விடுதலை !!!! ...

சிறை பட்டுதவிக்கும்
இந்த காதல்களை
விடுவித்தால்
அதுவே உண்மை காதல்.....
காதலுக்கு செய்யும்
"முதல் மரியாதை"..





Saturday, September 22, 2007

இடைஞ்சல்.....


உன்
கொலுசின்
ஓசை கூட
கொஞ்சலாய்
தெரிந்த எனக்கு !!!....

இயலாமையால்,
இன்று நீ...
இருமுவது கூட
இடைஞ்சலாய்
தெரிகிறது....
என் உறக்கத்திற்கு,....!!!

Friday, September 21, 2007

துணை.....

என்
நினைவுகள்
இருட்டினில் நடக்கின்றன,.......
துணையாக..
உன் மௌனம் மட்டும்,.....

Wednesday, September 12, 2007

நான்.....



கரையான்...
எறும்புகளை...
காத்து கிடக்கின்றேன்,...
நன்றி கடனாய்,.....
என் ஆத்மாவை பிரிந்த நான்.....

கடந்து வந்த
நாட்களை நினைக்கின்றேன்,...
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

என் ஆத்மாவின்
உற்பத்திக்கு
பாதிப் பாதியாய்
வித்திட்ட
என் தாய் தந்தைக்கோ,....

இல்லை......
பத்து மாதம் எனை சுமந்து
பக்குவமாய் உருக்கொடுத்த
என் தாயின் கருவறைக்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

என்னில்
அறிவொளியை ஏற்றி..
என் வாழ்வை
பகலாக்கிய குருவுக்கோ.....
இல்லை........
ஏகாந்த உலகை
எனக்கு காட்டாமல்,...
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
ஆறுதலாய்
எனை அரவணைத்த
தோழர்களுக்கோ....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

ஏக விரதயாய்
என்னில் கலந்து
என் சுமைகளையே
சுவையாக மாற்றி
என்னில் பாதியான
என்னவள்க்கோ,....
இல்லை.........

தள்ளாத வயதினிலே
விழுதுகலாய் எனை தாங்கிய
என் சந்ததிக்கோ.....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

இணை பிரியாமல்
என்னில் இருந்து
இயற்கைக்கு அடிமையாய்
எனை பிரிந்த...
என் ஆத்மாவிற்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

கடந்து வந்த நாட்களிலே...
கடன் பட்டு கிடக்கின்றேன்,...
பூமித்தாயின் மடியில்,...
பாரமாய் அவள்க்கும்.....
கண்களை மூடிவிட்டார்கள் ...
உறக்கம் வருகிறது....
உறங்குகின்றேன்,.....
தென்றலாய் வரும்
அவள் சுவாசத்தின் தாலாட்டில்,......

நன்றி கடனாய் !...
கரையான், எறும்புகளை....
காத்து,...காத்து,...

Thursday, September 6, 2007

சித்திரம்......



ஓவியத்தை
தானமாக தந்து
உதவிய காயத்ரிக்கு
நன்றிகள் பல.....
அழைத்ததும் ஏனோ?.....
மீண்டும் என்னில்
கலந்ததும் ஏனோ?.....
பூவில் தவழும்
பனித்துளி போல்
என்னில்
உறங்கும் உன்னை
உணர்த்தியதும் ஏனோ?......
என்
கனவுகளை
கலைத்ததும் ஏனோ?......

விரகத்தில்
மூழ்கி எடுத்த
என்
வேதனை முத்துக்களை,
வீட்டுக்குள்
பூட்டி வைத்தேன்,....
அதன்
விலங்குகளை
உடைத்து
வீதிக்கு வர
வித்திட்டதும் ஏனோ?.....
அதை
விலை பேசியதும் ஏனோ?.....

ரத்தத்தில் நனைத்த
மயில் தோகை
கொண்டு சித்திரம்
வரைந்ததும் ஏனோ ?.....
அதை
என் மனதில்
சிலையாக
நிறுத்தியதும் ஏனோ ?....

Tuesday, September 4, 2007

சொந்தம்,...


கீழ்வானில்
உதயமாகும்
சூரியனை போல்
மீண்டும் மீண்டும்,... !!!
என் நினைவுகளில்
உதிக்கின்ற உணர்வு,....
என் மனதோட்டத்தில்
கண்ணீர் பூக்களாய்
உன் நினைவு,.....

நீ
எனக்கு தானம் தந்த
துக்கங்கள் மட்டுமே
சொத்தாக எனை
சொந்தம் கொண்டுள்ளன,.....
அந்த ஆத்தோர
நாணல் கூட
நம் கதையை
பாடி நடக்கிறதே,....

எத்தனை கதைகள் !!!
எத்தனை கனவுகள் !!!
அத்தனை நிஜத்தையும்
நிழலாக மாற்ற
நான் என்ன
தவறு செய்தேன் உனை
காதலித்ததை தவிர,......

Saturday, September 1, 2007

ஆசை,...


உன் மனதின்
வீணையை மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய பௌர்ணமி
ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரியனாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....

நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்துகொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......

Friday, August 31, 2007

கண்ணீர்,..



அர்ச்சனை பூக்களுக்கு
அபிஷேகம் செய்கிறாய்
கண்ணீரில் !!!...
தங்காது பெண்ணே !!
கரிக்கிடும் பூக்கள்
உன்
"கண்ணீரின்" சூடில்

சோகம்,...


அந்திமாலை
வானம் போலே
சிவந்திருக்கிறதே
உன் இதழ்கள் !...
இரவு முழுவதும்
அழுத அடையாளமோ கண்ணீராய்,...
உன் மீது பனித்துளிகள்....

என் இனிய சிவப்பு ரோஜாவே,...
ஏன் இந்த வாட்டம்?...
உன் மது போதைக்கு
மயங்க வராத
வண்டினை எதிர் நோக்கியா?....
இல்லை...
மங்கை அவள் கூந்தல் மடி தராத
சோகத்தின் எதிரொலியா?..!!!

கனவு,....


என்
கனவுகளை

திருடி விட்டாய் !!!....
கண் இமைக்காமல்
இருந்தும்...
உனை...
கைது செய்ய
முடியவில்லையே !!!...

இதயம்,...


உடைந்து போன
என் இதயத்தை
ஒட்டவைக்க பார்த்தேன் ...
முடிய வில்லை,..
பாதியை வைத்து
என்ன செய்வது ?....
மீதி உன்னிடம் இருக்கையில்,.....

Wednesday, August 29, 2007

மழை,..



அடை மழையில்
நடக்க ஆசை என்றாய் !!...
எதர்க்கு,...
உன் கண்களின்
நீரை யாரும்
காணாமல் இருக்கவா?,....

மனம்,....



இன்று
உன் மனம் பூக்கவில்லை,....
இறைவனுக்கு
"பூவுமில்லை" .. !!!,...

நிஜம்,.....



நீ மட்டும்
நிஜமானால்,....
நான் என்றும்
நிழலாவேன்...!!.....

அனாதை,.....



அனாதையாகவே,..
இருக்க ஆசை..!,..
உன்
அரவணைப்பு
கிடைக்கும் வரை,....

பாதம்,....



நீ செல்லும் பாதை
என் பாதம் பட்ட
பூமியாகவே இருக்கட்டும்...!!!,....
நான் செல்லா...
புதுப்பாதை முட்கள்
உன் கால்களை,..
புண்ணாக்க விடமாட்டேன்...!!!,...

இதழ்கள்,...



இடையினமும்
வல்லினமும் இணைகயிலே,...
இவள்
இதழ்களுக்கு
இத்தனை
மெல்லினமா ?"!!!,..

தற்கொலை,.....






உன் கார்கூந்தலை
அழங்கரிக்க
காத்திருந்த பூவை,...
நீ.....
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !!...
அதுவோ
தானே உதிர்ந்து
இன்று "தற்கொலை செய்துகொண்டது"....!!!

ஒத்திகை,...




தூக்கத்தை
தொலைத்தவன்,...
பகல் முழுவதும்,
"ஒத்திகை பார்க்கிறேன்" !!!
கனவினில்
உன்னோடு பேச!!!....

திசை,...


திசை மாறி பறக்கின்றாய்,..!!!
திரும்ப அழைக்க
மனம் இல்லை.. !,..
என்றாவது
வருவாய் என,....
எப்போதும் திறந்திருக்கும்
என் கூடு !!,..

வெட்கம்,...





ஏய் வெட்கமே !!!,..
என்னவளை
என்னுடன்
இணைய விடு,...
இன்று மட்டும்
கொஞ்சம்
அவளை விட்டு நில்லு,.......

மௌனம்....


விட்டு விடு
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..

Sunday, August 26, 2007

பிரிவு,...


வாய்காலில்
நீரோடும்,
வரப்போடு
தான் பேசும் !!!....
நீரோடி போகும்,..
வரப்போ,......
நினைவோடு வாடும் !..

Friday, August 24, 2007

கானல் நீர்,...




கல்லுக்குள்
ஈரத்தை காட்டினேன் !!!,...
நீயோ,...
"கானல் நீரில்"
ஈரத்தை கேட்கிறாயே !!!,...

தென்றல்,...




என்னவளே,...

தென்றலை மட்டுமே ,...
அனுமதிக்கிறேன் !!!...
உனை தீண்ட,
''சுவாசமாய்''
என் இதயத்தில்
சிறைப்பட்ட உனக்கு!!!,....