Wednesday, January 16, 2008

பைத்தியமாய் ...





என் கனவு....

என் இரவுகளை
நீ சிறை பிடித்ததால்
என் கனவுகள்
களவாடப்பட்டு விட்டன !!!...
விடுதலைக்கு
இன்றும் என்விழிகள்
சாட்சி கூண்டில் ...

என் ஆசைகள் ...

அழகாய் இருக்கிறதடி
உன் வாசல் கோலங்கள்...
புள்ளிகளாய் நீயும்
என் ஆசைகளை
வைப்பதாலோ !!!...
நசுங்கித்தான் போனதடி
அதுவும்
உன் வீட்டு நாய்குட்டி
முதல் பால்காரன் வரை
பாதங்கள் பட்டு !!!..

என் நினைவுகள் ....

மறந்துவிடு
எனச்சொல்லி
நீ எறிந்த கல்லில்
உடைந்து விட்டது ...
கண்ணாடியாய் !!!...
ஓராயிரம்
உன் பிம்பங்கள்
உடைந்த துண்டுகளில்
உட்கார்ந்து கொண்டு
இன்றும்
கீறுகின்றன...
என் இதயத்தை !!!...

என் சிரிப்பு ...

அதை எடுத்து நீயும்
வீதியில் எறிந்ததால்
எனை பார்த்தாலே
அள்ளி தருகிறார்கள்
அனைவரும் எனக்கு...
என்ன செய்ய ...
நானும் தெரிகிறேனே
பைத்தியமாய் !!!...
அவர்களுக்கும் ...