Monday, March 3, 2008

சமர்ப்பணம் ...




உன் நிழல்களில்
நிஜத்தை தேடிய
என் நினைவுகள்
சிதையிலே தீ கனலாய் ...

ஓசைகள்
ஒடுங்கிவிட்ட
கள்ளிமுள் காட்டின்
காரிருள்
மௌனங்கள்
கண்களுக்கு
காட்சிகளாய் ....

கண்ணீர் ஆற்றின்
கரையோரம்
கருநாகம் ஊர்கின்ற
மண் கோபுரத்தின்
விஷ வாடையும்
பலி மந்திரமும்
பகல் கனவுகளாய் ....

உயிர் பெறும்
ஒவ்வொரு கணங்களும்
நீ எனக்கு
சமர்ப்பணமாய்
சார்த்திய
வாடா மலர்களே .....