Monday, December 10, 2007

உறங்காத மௌனம் ...


இதயத்தின்
இதழ்களை
இதமாக வருடி,....
அலை அலையாய்
கேள்விகள்
அடங்காமல் எழ ,...
பதில் ஒன்றும் சொல்லாமல்
எங்கே மறைந்தாய் ?....
என் உயிரே,...

ஆயிரம்
கரங்கள் கொண்டு
அணைக்க துடிக்கிறதே
சோகம் ,...
சூரிய கதிர்களாய்
மனதை ,...

கவிதை மழை
பனியாய் தழுவ
தேடி தேடி....
தேங்குதே நெஞ்சம்
பூஞ்சோலையாம் !!!...
உனை காண ,..

அலைபாயும்
காற்றாய்
என் துயரம்,...
ஆதரவாய் இன்றும்
உறங்காத
உன் மௌனம் ,...