Wednesday, August 29, 2007

மழை,..



அடை மழையில்
நடக்க ஆசை என்றாய் !!...
எதர்க்கு,...
உன் கண்களின்
நீரை யாரும்
காணாமல் இருக்கவா?,....

மனம்,....



இன்று
உன் மனம் பூக்கவில்லை,....
இறைவனுக்கு
"பூவுமில்லை" .. !!!,...

நிஜம்,.....



நீ மட்டும்
நிஜமானால்,....
நான் என்றும்
நிழலாவேன்...!!.....

அனாதை,.....



அனாதையாகவே,..
இருக்க ஆசை..!,..
உன்
அரவணைப்பு
கிடைக்கும் வரை,....

பாதம்,....



நீ செல்லும் பாதை
என் பாதம் பட்ட
பூமியாகவே இருக்கட்டும்...!!!,....
நான் செல்லா...
புதுப்பாதை முட்கள்
உன் கால்களை,..
புண்ணாக்க விடமாட்டேன்...!!!,...

இதழ்கள்,...



இடையினமும்
வல்லினமும் இணைகயிலே,...
இவள்
இதழ்களுக்கு
இத்தனை
மெல்லினமா ?"!!!,..

தற்கொலை,.....






உன் கார்கூந்தலை
அழங்கரிக்க
காத்திருந்த பூவை,...
நீ.....
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !!...
அதுவோ
தானே உதிர்ந்து
இன்று "தற்கொலை செய்துகொண்டது"....!!!

ஒத்திகை,...




தூக்கத்தை
தொலைத்தவன்,...
பகல் முழுவதும்,
"ஒத்திகை பார்க்கிறேன்" !!!
கனவினில்
உன்னோடு பேச!!!....

திசை,...


திசை மாறி பறக்கின்றாய்,..!!!
திரும்ப அழைக்க
மனம் இல்லை.. !,..
என்றாவது
வருவாய் என,....
எப்போதும் திறந்திருக்கும்
என் கூடு !!,..

வெட்கம்,...





ஏய் வெட்கமே !!!,..
என்னவளை
என்னுடன்
இணைய விடு,...
இன்று மட்டும்
கொஞ்சம்
அவளை விட்டு நில்லு,.......

மௌனம்....


விட்டு விடு
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..