Tuesday, September 23, 2008

நிழலும் நிஜமாகும்...


நீண்ட
நேரமாய்
மௌனம் எனை
விழுங்கிக்கொண்டு ..

அறையின்
வலது மூலை
திறந்த ஜன்னலில்
என் தேடல்களின்
தொடக்கமாய்
பகல் உதிர்கிறது
பழுத்த இலையாக ...

உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..

உன்
இளம்பிறை
விழிக்கதிரில்
உறக்கத்தை மறந்து
ஒளி வீசிய
என் இரவுகள் ...

ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..

நரகக்கோட்டையின்
மதில்கள் முட்டி
சிதைபட்ட ஆத்மாவுமாய் ..
இரவுகளை தேடுகிறேன்
எனை அழைக்க
நீ வருவாய் என ...

நேரமாகிறது
இந்த பகலுக்கு ...
கதிரவனே
கண் மறைந்திடு ...
நிழலும் நிஜமாகும்
நேரமிது ..