Friday, August 31, 2007

கண்ணீர்,..



அர்ச்சனை பூக்களுக்கு
அபிஷேகம் செய்கிறாய்
கண்ணீரில் !!!...
தங்காது பெண்ணே !!
கரிக்கிடும் பூக்கள்
உன்
"கண்ணீரின்" சூடில்

சோகம்,...


அந்திமாலை
வானம் போலே
சிவந்திருக்கிறதே
உன் இதழ்கள் !...
இரவு முழுவதும்
அழுத அடையாளமோ கண்ணீராய்,...
உன் மீது பனித்துளிகள்....

என் இனிய சிவப்பு ரோஜாவே,...
ஏன் இந்த வாட்டம்?...
உன் மது போதைக்கு
மயங்க வராத
வண்டினை எதிர் நோக்கியா?....
இல்லை...
மங்கை அவள் கூந்தல் மடி தராத
சோகத்தின் எதிரொலியா?..!!!

கனவு,....


என்
கனவுகளை

திருடி விட்டாய் !!!....
கண் இமைக்காமல்
இருந்தும்...
உனை...
கைது செய்ய
முடியவில்லையே !!!...

இதயம்,...


உடைந்து போன
என் இதயத்தை
ஒட்டவைக்க பார்த்தேன் ...
முடிய வில்லை,..
பாதியை வைத்து
என்ன செய்வது ?....
மீதி உன்னிடம் இருக்கையில்,.....

Wednesday, August 29, 2007

மழை,..



அடை மழையில்
நடக்க ஆசை என்றாய் !!...
எதர்க்கு,...
உன் கண்களின்
நீரை யாரும்
காணாமல் இருக்கவா?,....

மனம்,....



இன்று
உன் மனம் பூக்கவில்லை,....
இறைவனுக்கு
"பூவுமில்லை" .. !!!,...

நிஜம்,.....



நீ மட்டும்
நிஜமானால்,....
நான் என்றும்
நிழலாவேன்...!!.....

அனாதை,.....



அனாதையாகவே,..
இருக்க ஆசை..!,..
உன்
அரவணைப்பு
கிடைக்கும் வரை,....

பாதம்,....



நீ செல்லும் பாதை
என் பாதம் பட்ட
பூமியாகவே இருக்கட்டும்...!!!,....
நான் செல்லா...
புதுப்பாதை முட்கள்
உன் கால்களை,..
புண்ணாக்க விடமாட்டேன்...!!!,...

இதழ்கள்,...



இடையினமும்
வல்லினமும் இணைகயிலே,...
இவள்
இதழ்களுக்கு
இத்தனை
மெல்லினமா ?"!!!,..

தற்கொலை,.....






உன் கார்கூந்தலை
அழங்கரிக்க
காத்திருந்த பூவை,...
நீ.....
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !!...
அதுவோ
தானே உதிர்ந்து
இன்று "தற்கொலை செய்துகொண்டது"....!!!

ஒத்திகை,...




தூக்கத்தை
தொலைத்தவன்,...
பகல் முழுவதும்,
"ஒத்திகை பார்க்கிறேன்" !!!
கனவினில்
உன்னோடு பேச!!!....

திசை,...


திசை மாறி பறக்கின்றாய்,..!!!
திரும்ப அழைக்க
மனம் இல்லை.. !,..
என்றாவது
வருவாய் என,....
எப்போதும் திறந்திருக்கும்
என் கூடு !!,..

வெட்கம்,...





ஏய் வெட்கமே !!!,..
என்னவளை
என்னுடன்
இணைய விடு,...
இன்று மட்டும்
கொஞ்சம்
அவளை விட்டு நில்லு,.......

மௌனம்....


விட்டு விடு
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..

Sunday, August 26, 2007

பிரிவு,...


வாய்காலில்
நீரோடும்,
வரப்போடு
தான் பேசும் !!!....
நீரோடி போகும்,..
வரப்போ,......
நினைவோடு வாடும் !..

Friday, August 24, 2007

கானல் நீர்,...




கல்லுக்குள்
ஈரத்தை காட்டினேன் !!!,...
நீயோ,...
"கானல் நீரில்"
ஈரத்தை கேட்கிறாயே !!!,...

தென்றல்,...




என்னவளே,...

தென்றலை மட்டுமே ,...
அனுமதிக்கிறேன் !!!...
உனை தீண்ட,
''சுவாசமாய்''
என் இதயத்தில்
சிறைப்பட்ட உனக்கு!!!,....