Friday, August 31, 2007
சோகம்,...
அந்திமாலை
வானம் போலே
சிவந்திருக்கிறதே
உன் இதழ்கள் !...
இரவு முழுவதும்
அழுத அடையாளமோ கண்ணீராய்,...
உன் மீது பனித்துளிகள்....
என் இனிய சிவப்பு ரோஜாவே,...
ஏன் இந்த வாட்டம்?...
உன் மது போதைக்கு
மயங்க வராத
வண்டினை எதிர் நோக்கியா?....
இல்லை...
மங்கை அவள் கூந்தல் மடி தராத
சோகத்தின் எதிரொலியா?..!!!
Posted by Vishnu... at 12:15 AM 2 comments
இதயம்,...
உடைந்து போன
என் இதயத்தை
ஒட்டவைக்க பார்த்தேன் ...
முடிய வில்லை,..
பாதியை வைத்து
என்ன செய்வது ?....
மீதி உன்னிடம் இருக்கையில்,.....
Posted by Vishnu... at 12:05 AM 4 comments
Wednesday, August 29, 2007
திசை,...
திசை மாறி பறக்கின்றாய்,..!!!
திரும்ப அழைக்க
மனம் இல்லை.. !,..
என்றாவது
வருவாய் என,....
எப்போதும் திறந்திருக்கும்
என் கூடு !!,..
Posted by Vishnu... at 9:47 AM 0 comments
மௌனம்....
விட்டு விடு
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..
கண்ணே !!!,..
வேதனை தாங்கவில்லை!!,...
இனியும்
உன் மௌனத்தை 'ஆயுதமாக்கி'
கண்களால்
எனை காயப்படுத்தாதே!!,..
Posted by Vishnu... at 9:23 AM 0 comments
Sunday, August 26, 2007
Friday, August 24, 2007
Subscribe to:
Posts (Atom)