Monday, November 24, 2008

பிரிவும் ஒரு காதல் தான் !!!...






பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....

Friday, November 21, 2008

கடந்த வாலிபம் ...

அதி பிரமாண்டமாய்
சிறகடித்து
வான்தொட்டும் ...
திரும்பும்வழி தெரியாமல்
விலகி போன
வெள்ளாடாய் மனம் ...

பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி ...

வழி நெடுக
கசிந்து கொண்டு இருக்கிறது ...
கீறிய ரணங்களின்
வேர்வைகள் ...
தொடர்ந்து
துடைத்திருந்தும்
வழிந்த வண்ணமாய்
கடந்திருக்கிறது
வாலிபம் ....