Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....