மார்கழி பனியில்
அதிகாலை பூக்கள் ,...
சித்திரையில்
பௌர்ணமி நிலவு...
மரத்தில் மாங்கனியோடு
அணீலின் கொஞ்சல் ...
கூட்டமாக பறக்கும்
தேசாடன பறவைகள்...
கரையோடு காதல்தீரா
அலையோசை...
வான்மகளின்
முகம் சிவந்த வெட்கம்,...
சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...
காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...