Tuesday, November 27, 2007

ஆயுள் கைதி,....




உனக்காக
காத்திருக்கையில்.....

நகராத நாட்கள்....
நீங்காத நேரங்கள்...
குறையாத மணித்துளிகள்....
அத்தனையும்
சொல்கிறது பெண்ணே !!!...
"கவிதையான நிலவுக்கு"
காத்திருக்க வேண்டுமாம் ...

கண்டதும் காதல் ...
இல்லை !!!.. இல்லை !!!....
காணமலும் காதல் வரும் ...
ஆதாரம் கேட்கிறார்களா ?..
அனுப்பிவை என்னிடம்....

சிணுங்கல்களால் எனை
சிறை பிடித்தவளே,....
விடுதலையே வேண்டாம்..
அடைத்துவிடு மனக்கூட்டில் ....
"ஆயுள் கைதியாய் "
தீர்ப்பும் சொல்லி !!!....