Wednesday, March 14, 2012

அபயம் தேடி...


புகையூட்டப்பட்ட
இருட்டறையில் தப்பி  வர
துடித்தபடி மனது ..

துயரத்தோடு  கனவுகளும்
வெறுப்பின் துணையோடு
அபயம்  தேடி  அலைபாய

கடந்த கால
கதைகளிலெல்லாம்  மூடல் பனியாய்
சோகப்படலம் சுற்றி வர ..

புலம்பல் திரி கொளுத்தப்பட்டு 
பிரபஞ்சமெங்கும்  மானுடத்தின் அவலம்
பேரிடியாய் அதிர்ந்து  ஒலிக்கிறதே ..

                                                         விஷ்ணு ...