Monday, June 9, 2008

இந்த ஜென்மம் ...


பதில்கள்
பல இருந்தும் ..
மொழிகளின்றி
ஊனமாகிவிட்ட
கேள்விகள் ...

மீட்ட துடித்த
விரல்களையே
காயமாக்கிவிட்டு
கண்ணீர்விடும்
வீணை நரம்புகள் ..

இதயத்தில் தங்கி
வெளிவரா
ஆசைகளின் ..
அன்றாட அவலங்கள் ...

தோல்வி என
தெரியாமல்
தொடர்ந்து
தீக்கிரையாகும் ..
விட்டில் பூச்சியின்
விளக்கு காதலாய் ...

இந்த ஜென்மமும் ..
நகர்கின்ற
பரிதாப நாட்களும் ...