Wednesday, January 16, 2008

பைத்தியமாய் ...





என் கனவு....

என் இரவுகளை
நீ சிறை பிடித்ததால்
என் கனவுகள்
களவாடப்பட்டு விட்டன !!!...
விடுதலைக்கு
இன்றும் என்விழிகள்
சாட்சி கூண்டில் ...

என் ஆசைகள் ...

அழகாய் இருக்கிறதடி
உன் வாசல் கோலங்கள்...
புள்ளிகளாய் நீயும்
என் ஆசைகளை
வைப்பதாலோ !!!...
நசுங்கித்தான் போனதடி
அதுவும்
உன் வீட்டு நாய்குட்டி
முதல் பால்காரன் வரை
பாதங்கள் பட்டு !!!..

என் நினைவுகள் ....

மறந்துவிடு
எனச்சொல்லி
நீ எறிந்த கல்லில்
உடைந்து விட்டது ...
கண்ணாடியாய் !!!...
ஓராயிரம்
உன் பிம்பங்கள்
உடைந்த துண்டுகளில்
உட்கார்ந்து கொண்டு
இன்றும்
கீறுகின்றன...
என் இதயத்தை !!!...

என் சிரிப்பு ...

அதை எடுத்து நீயும்
வீதியில் எறிந்ததால்
எனை பார்த்தாலே
அள்ளி தருகிறார்கள்
அனைவரும் எனக்கு...
என்ன செய்ய ...
நானும் தெரிகிறேனே
பைத்தியமாய் !!!...
அவர்களுக்கும் ...

Monday, January 14, 2008

இனிய நட்பு ,...





என் இனிய தோழியே ...
நினைவிருக்கிறதா உனக்கு...
நமது அறிமுக நாட்கள் ...
ஆனந்தமாய் ..ஆர்பாடமாய்...

நானும் ஆமை வேகத்தில்
நீயோ அதிவேக புகைவண்டியாய்..
நல்ல நண்பர்களாய் நாமும்
நெகிழாத நாளும் உண்டோ

தொலைவில் இருக்கும் உனை
தொடர்ந்து வந்திடவே
தொலைபேசி உதவி அது
தொடர்கதையாய் தொடர்கிறதே

இன்பங்களை மட்டுமே
என்னவள்க்கு சொந்தமாக்கி
துன்பமது வரும்போது நெஞ்சம்
துணையாக உனை தேடும்

கனமான கவலைகளில் நானும்
கால் இடறி வீழ்வதில்லை
தோள் கொடுக்க நீயும் வந்து
தோழியாக நிற்பதனால் ...

இறந்த கால ஏமாற்றங்கள்
எத்தனையோ எந்தன் உள்ளில் ...
துவண்டு போன மனதோடே
இருளாக இருந்த எனை ..

விளக்குடனே நீயும் வந்து
வெளிச்சமாக பாதை தந்தாய்..
தோழி நீயும் கிடைததிலே ..
தலைகனமே எனக்கும் கொஞ்சம் ...

இதயத்தின் தோட்டத்தில்
நட்புதனை பயிர் செய்வோம் ...
காவல் காப்போம் காத்திருந்து
காலமெலாம் அது பூக்கட்டுமே ...