Tuesday, September 23, 2008

நிழலும் நிஜமாகும்...


நீண்ட
நேரமாய்
மௌனம் எனை
விழுங்கிக்கொண்டு ..

அறையின்
வலது மூலை
திறந்த ஜன்னலில்
என் தேடல்களின்
தொடக்கமாய்
பகல் உதிர்கிறது
பழுத்த இலையாக ...

உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..

உன்
இளம்பிறை
விழிக்கதிரில்
உறக்கத்தை மறந்து
ஒளி வீசிய
என் இரவுகள் ...

ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..

நரகக்கோட்டையின்
மதில்கள் முட்டி
சிதைபட்ட ஆத்மாவுமாய் ..
இரவுகளை தேடுகிறேன்
எனை அழைக்க
நீ வருவாய் என ...

நேரமாகிறது
இந்த பகலுக்கு ...
கதிரவனே
கண் மறைந்திடு ...
நிழலும் நிஜமாகும்
நேரமிது ..

Thursday, September 11, 2008

தொடர்ந்து வரும் முதல் சந்திப்பு ...




நான்
அன்றும்
வழக்கம்போல்
பேருந்து நிறுத்தத்தில் ...

பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..

நெருங்கி வர வர
எனை நோக்கி ...
மெல்லிய புன்னகை !!!...

அந்த புன்னகையில்
சிறிதாக சுருங்கிய
இந்த பிரபஞ்சம் ...

இன்றும் சிறிதாகவே ...
விமோசனமே இன்றி
விரியாமல் ...

மீண்டும் மீண்டும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருந்தால்
எதையும்
எதுவுமாக்கலாம் ...

தொடர்ந்த
நம் சந்திப்புகளில் ..
சொல்லி சொல்லி
என்னில் நீ
எதை ..எதுவாக்கினாய் ???..
இன்றும் எனக்கு
புரியாத புதிராய் ...

காலங்கள்
பல கடந்தும் ...
மனதில் தினம் சந்திக்கிறேன் ..
அதே காலை...
அதே நிறுத்தம் ...

அனைத்தும்
அப்படியே ..
ஆனால் நீ மட்டும்
முந்தைய
நாட்களை விட
அதி அழகாய் ...அன்பாய் ..
சொன்னதையே
சொல்லிக்கொண்டு ...