Tuesday, September 4, 2007

சொந்தம்,...


கீழ்வானில்
உதயமாகும்
சூரியனை போல்
மீண்டும் மீண்டும்,... !!!
என் நினைவுகளில்
உதிக்கின்ற உணர்வு,....
என் மனதோட்டத்தில்
கண்ணீர் பூக்களாய்
உன் நினைவு,.....

நீ
எனக்கு தானம் தந்த
துக்கங்கள் மட்டுமே
சொத்தாக எனை
சொந்தம் கொண்டுள்ளன,.....
அந்த ஆத்தோர
நாணல் கூட
நம் கதையை
பாடி நடக்கிறதே,....

எத்தனை கதைகள் !!!
எத்தனை கனவுகள் !!!
அத்தனை நிஜத்தையும்
நிழலாக மாற்ற
நான் என்ன
தவறு செய்தேன் உனை
காதலித்ததை தவிர,......