Saturday, October 11, 2008

கனவொன்று நேற்றும் ...



அர்த்த
ஜாமத்தில்
அடிக்கடி வரும்
கனவொன்று
நேற்றும் ...

இருண்ட அறை ..
என்னால்
இயன்றது
இத்தனையே என
இருட்டை
விரட்டிக்கொண்டு
ஓரத்தில் சிறு விளக்கு ...

அவ்வப்போது
தேங்கல்களாய்
சில முனங்கல்கள் ..
மெல்ல பதட்டத்தோடு
நெருங்குகிறேன் ..

மூலையில்
முகம் புதைத்து
நெஞ்சில் உள்ளதை
சொல்லத்தெரியாமல்
அழும் சிறு குழந்தை ..

ஆறுதலாய்
அரவணைக்க
அன்பாய் தொட்டு
மூடி இருந்த
பிஞ்சு கைகளை ..
விலக்குகிறேன் ..

ஐயோ !!!...
என் முகம் ..

சிறு வயதில்
அறியாமல்
அனாதையாய்
நான் தொலைத்த
அன்றைய என்முகம் ...