Friday, November 21, 2008

கடந்த வாலிபம் ...

அதி பிரமாண்டமாய்
சிறகடித்து
வான்தொட்டும் ...
திரும்பும்வழி தெரியாமல்
விலகி போன
வெள்ளாடாய் மனம் ...

பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி ...

வழி நெடுக
கசிந்து கொண்டு இருக்கிறது ...
கீறிய ரணங்களின்
வேர்வைகள் ...
தொடர்ந்து
துடைத்திருந்தும்
வழிந்த வண்ணமாய்
கடந்திருக்கிறது
வாலிபம் ....