Saturday, September 1, 2007

ஆசை,...


உன் மனதின்
வீணையை மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய பௌர்ணமி
ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரியனாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....

நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்துகொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......

No comments: