என்னவளே !!!...
உன் இதயத்தை
நானும்
நானும்
தடவிக்கொண்டும்...
வருடிக்கொண்டும்...
புரியமாட்டேன்
என்கிறது பெண்ணே !!!
என்கிறது பெண்ணே !!!
குருடனுக்கு கிடைத்த
மோனோலிஸா ஓவியமாய்...!!!!....
தேடி தேடி கால்கள்
தேய்ந்தது தான் மிச்சம் !!!...
அகராதியே கிடைக்கவில்லை
உன் மௌனத்தின்
அர்த்தம் பார்க்க...!!!...
ஊமை கண்ட
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
ஊர் அறிய ஆசை இல்லை !!!...
ஊன்றுகோலாய்....
நீ உணர்ந்தால் போதுமடி..!!!
3 comments:
ஊமை கண்ட
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
ஊர் அறிய ஆசை இல்லை !!!...
ஊன்றுகோலாய்....
நீ உணர்ந்தால் போதுமடி..!!!
காதலின் வேதனை புறிகின்றது......
வாழ்த்துக்கள்
வேதனைக்களுக்கு
வேலி இல்லை ...
அனுமதி இன்றி
அடைக்கலம்
புகும் மனதில் ....
என்னில்
அழையா விருந்தாளி
என்றும் என்கூட்டில்
இணைபிரியா கூட்டாளி ,...
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
வணங்குகிறேன்....
இனியவள் அவர்களே !!!...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,...
pksvichu@gmail.com
/அகராதியே கிடைக்கவில்லை
உன் மெளனத்தின்
அர்த்தம் பார்க்க/
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, விஷ்ணு அவர்களே!
Post a Comment