Wednesday, September 26, 2007

கற்பூர வாசனை ....


பௌர்ணமி
நிலவின் ஒளியை
நூலாக கோர்த்து
பட்டாடை செய்து வைத்தேன்......
நட்சத்திரத்தை எல்லாம்
முத்துக்களாய்
தைத்து விட்டேன்
முந்தானைக்கு அழகு சேர்க்க......
மல்லிகை பூவின்
மாநாடே நடத்தி விட்டேன்
சேலையில் சுகமான
மணம் சேர......

அழகான சேலை என்று
அக்கம் பக்கம் புரணி பேச....
காத்திருந்தேன் என்னவளின்
ஜென்ம தின பரிசளிக்க,....
பிறந்த நாளும் வந்தது !..
என்னவளும் வந்தாள் !..
பட்டாடை பொக்கிசத்தை
பவ்வியமாய் பரிசளித்தேன் !!!!....
பக்குவமாய் திறந்து பார்த்தாள் !!!....
கனல் தெரிக்கும்
அவள் பார்வையில்...!!!
சுருக்கென்று முள் தைத்தது
என் நெஞ்சில் !!!!.... அவள்
சுரிதார் போதுமென்று
சொன்ன போது !!!.....

பாட்டி சொன்ன பழமொழி ஞாபகம் வந்தது....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?,.....

No comments: