Monday, November 19, 2007

என்னவனே ...



என்னவனே ...

அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

5 comments:

இனியவள் said...

இந்த ஆசைகள் நிறைவேற மருத்தால் என்ன ,காலங்கள் கனியும்,இன்பங்களும் பிறக்கும்...

வாழ்த்துக்கள்
அன்புடன் இனியவள்

Anonymous said...

romba alakaruk ... enna ashayam nee oru alakana alano. entha mathiri kavithai varunthathu enge ninnu.........kanna

meenu

Vishnu... said...

இனியவள் மற்றும் மீனு அவர்களுக்கும் எனது நன்றி ....
உங்கள் வருகை எனை
இனியும் எழுத தூண்டுகிறது....

Vishnu...
pksvichu@gmail.com

Anonymous said...

கவிதை மிக கவர்ந்திழுக்கின்றது
நண்பரே...
வாழ்த்துக்கள்...

Vishnu... said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை அரசன் .....உங்கள் வருகையை என்றும் எதிர்பார்க்கும்
இனிய தோழன் விஷ்ணு ...