Sunday, September 30, 2007

நீ...



அரங்கேறத் துடிக்கும்
பரதத்தின்
அபிநய முத்திரைகளோ !!! ....
எண்ண தோன்றுகிறது
பெண்ணே .....
உன் இமைகளின்
அசைவு என்னை....!!!..

என்னவளே ...
இரும்பாக
இருந்த நானும்... சிறு
துரும்பாக
இளைத்துவிட்டேன்...!!!
இனியும் இழுக்காதே...
"காந்தமாம்"
உன் கருவிழிகளை காட்டி !!!....

தாயின்
அழைப்புக்கு வேகம் ...
தவழ்ந்து வரும் மழலை...
புரியவில்லை......
உன் தலையாட்டகளைத்தான்
சொல்கிறேன்...
என் இளம் தளிரே....

நாளைக்கு
மீதி வைத்து ...
பாதியிலே
நிறுத்துகின்றேன்....
ஏன் என்கிறாயா ?...
காத்திருக்கும் சுகத்தை
நீயும்
காணவேண்டும்...!!!... என் கண்ணே...

3 comments:

Unknown said...

superb......

காயத்ரி said...

Enna arumaiyana kavithai.. ennai kattippottu vittathu ungal varikal... Super... keep it up...

Enrum anbudan kavina...

Vishnu... said...

காயத்ரி அவர்களுக்கும்
ராஜி அவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்...

காயத்ரி அவர்களே
உங்கள் பாராட்டுக்கள் என்னை இனியும் எழுத தூண்டுகிறது ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு