Friday, November 21, 2008

கடந்த வாலிபம் ...

அதி பிரமாண்டமாய்
சிறகடித்து
வான்தொட்டும் ...
திரும்பும்வழி தெரியாமல்
விலகி போன
வெள்ளாடாய் மனம் ...

பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி ...

வழி நெடுக
கசிந்து கொண்டு இருக்கிறது ...
கீறிய ரணங்களின்
வேர்வைகள் ...
தொடர்ந்து
துடைத்திருந்தும்
வழிந்த வண்ணமாய்
கடந்திருக்கிறது
வாலிபம் ....

4 comments:

Unknown said...

/
பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி .../

இந்த வரிகள் நன்றாக அமைந்திருக்கிறது விஷ்ணு அவர்களே!

thamizhparavai said...

நண்பர் விஷ்ணுவுக்கு...
நீண்டநாள் இளைப்பாறிவிட்டு வந்த கவிதை மனம், சற்று அதிகப் பாய்ச்சலுடன் வந்திருக்கிறது. கவிதை கனகச்சிதமாய் இருக்கிறது நண்பரே...
பிம்பங்கள் பட்டே உடைந்த கண்ணாடி உவமை பிரமாதம்.
கடந்த வாலிபத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்....

Vishnu... said...

Kanthi said...
/
பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி .../

இந்த வரிகள் நன்றாக அமைந்திருக்கிறது விஷ்ணு அவர்களே!

Kanthi said...
/
பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி .../

இந்த வரிகள் நன்றாக அமைந்திருக்கிறது விஷ்ணு அவர்களே!

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அன்பின் காந்தி அவர்களே ...
அடிக்கடி வருகை தாருங்கள் ....

அன்புடன்
விஷ்ணு

Vishnu... said...

// தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணுவுக்கு...
நீண்டநாள் இளைப்பாறிவிட்டு வந்த கவிதை மனம், சற்று அதிகப் பாய்ச்சலுடன் வந்திருக்கிறது. கவிதை கனகச்சிதமாய் இருக்கிறது நண்பரே...
பிம்பங்கள் பட்டே உடைந்த கண்ணாடி உவமை பிரமாதம்.
கடந்த வாலிபத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்....//



உண்மை தான் நண்பரே ..கொஞ்ச நாட்களாக ..வலை தளம் வர இயலாத படி வேலை பளுவில் சிக்கி கொண்டேன் ..இப்போது எல்லாம் சரியாகி விட்டது ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ...

அன்புடன்
விஷ்ணு