இதயத்தின்
இதழ்களை
இதமாக வருடி,....
அலை அலையாய்
கேள்விகள்
அடங்காமல் எழ ,...
பதில் ஒன்றும் சொல்லாமல்
எங்கே மறைந்தாய் ?....
என் உயிரே,...
ஆயிரம்
கரங்கள் கொண்டு
அணைக்க துடிக்கிறதே
சோகம் ,...
சூரிய கதிர்களாய்
மனதை ,...
கவிதை மழை
பனியாய் தழுவ
தேடி தேடி....
தேங்குதே நெஞ்சம்
பூஞ்சோலையாம் !!!...
உனை காண ,..
அலைபாயும்
காற்றாய்
என் துயரம்,...
ஆதரவாய் இன்றும்
உறங்காத
உன் மௌனம் ,...
7 comments:
இந்த மௌனம் தான் அவளுக்கு அழகோ??சொற்க்கள் கடந்த மௌனத்திற்க்கும் அதிக அர்த்தங்கள் இருக்கும்..இதுவும் ஒரு தேடல் தான்...
அழகான சிந்தனை,வாழ்த்துக்கள்
மௌனம் சில நேரங்களில்..
நாம் சொல்ல நினைப்பதைவிட அதிகம் பேசிவிடும் ,...
மௌனத்திற்கு
அர்த்தங்கள் ஆயிரம் ,....
வாழ்த்துக்கு
நன்றியுடன் வணங்குகிறேன் இனியவள் அவர்களே !!!...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
என்னேட எது ரோப அழகான கவிதே என்ன ரொமாண்டிக் ஐடியா கொடிதுவேசிருக்கு அப்பா உங்களுக்கு சுக்யம் தானா
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்பிடி
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முத்து அவர்களே...
ஒரு சின்ன சந்தேகம் ...subbukuwt@gmail.com என்பது ...உங்கள் முகவரி தானே ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
மெளனத்திற்கு தான்
எத்தனை
மொழிகள்
உங்கள் வருகைக்கும் எண்ணங்களை பதிவு செய்ததற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !!!.... திகழ் மிளிர் அவர்களே !!!...
அன்புடன்
என்றும் இனியதோழன்
விஷ்ணு
Post a Comment