Wednesday, September 26, 2007

"கவிநா"....






எனது

இனிய கவிதைத்தோழி....

"கவி" காக நான்

எழுதிய சில வரிகள்....

இனிமையானவள்......என்றும்
இளமையானவள்.......மனதில்...

இனியவள்
இவள் ஜன்னலோரம்
வந்துவிட்டால்
கடிகாரங்களுக்கு கூட
காய்ச்சல் வந்துவிடும் !!!....
நேரத்தை காட்ட
நினைவில்லை அவைகளுக்கு...!!..


நான்கைந்து வயதில்
பேச தொடங்கியவள்..
காற்றினோடும்
கடல் அலைகலோடும்.....
இவர்கள்
இருவர்க்கும் இடையே
மொழி பெயர்க்க
தென்றல் விழி வைத்து
காத்திருக்கும்......
இவள் வரும் ஜன்னல்
வழி பார்த்து.......


சில நேரங்களில்
ஓடங்கள் கூட
இவளிடம் கேட்பததுண்டு.....
நீ..
கடல் அலைகளையும் ,
காற்றையும்
கட்டி போட்டு விட்டால்
நாங்கள் கரை
சேர்வது எப்படி என,...
சிரிக்கின்றாள்,.....
சில நேரம் தனக்குள்ளே......


இவள்
நினைவுப் பறவை
சிறகடித்தால் அன்று
ஓவியங்கள் பல
ஊர்வலமே போகும்.....
ஜன்னலின்
திரை சீலை கூட
தானே சிரிக்கும்...!!!
வெட்கத்தால் தன் முகமே
தான் மறைக்கும்,....!!!...


இவள் மனம்
அழகான பூஞ்சோலை ,..
அது இன்று நேற்று
உருவானதல்ல
சிறு வயதில்
இவள் நட்ட நாற்றுகள்
வளர்ந்து இன்று
வண்ண பூன்சோலையாய்...
வாசம் வீசுகின்றன,..
வாசகர் இல்லா புத்தகமாய்,...


வாசிப்பவர் இல்லா ஓவியமாய்...
இவள் எழுத தொடங்கியது
எத்தனயோ
நாட்களுக்கு முன்னால்
நாட்கள் செல்ல செல்ல...
முதல் வாசகனை கிடைத்தது...
சகோதரியின் உருவத்தில்...
உற்சாகம் ஊட்ட ஆளில்லை
இருந்திருந்தால்
உயரத்தில் இருந்திருப்பாள்,..


நண்பர்கள் கூட்டத்தை
சிறைப்பிடிக்கவே
அன்பினால் ஆன
அரண்மனை அமைத்துள்ளால்...
அதில் அடைப்பட்டால்
தப்பி செல்ல மனம் வராது.....
தண்டனைகளோ !!!...
தவிர்க்க தோன்றா
நட்பின் போதை,..!!!..


இவள்
தாய் தந்தை
உடன் பிறப்பு என ..
அனைவரிடமும்
அன்பை அளித்து
அரவணைப்பை பெறுபவள்,..
ஆனால்
மனத்திற்க்குள் கொஞ்சம்
தனிமையில் வாழ்பவள்....


இவள்
இதயத்தில்
நண்பர்களுக்காகவே
நல்ல ஒரு இடத்தை
வேலி கட்டி வைத்துள்ளால்...அதில்
நாம்.... நமது.....
நல்ல நினைவுகளை
தைரியமாக விதைக்கலாம்.....
பசுமை மாறாமல் ...
என்றும் ஈரத்துடன் ...
காத்து வளர்ப்பாள்,...


இனிமையானவள் .....என்றும் !!!...
இளமையானவள் ...மனதில் !!!...

1 comment:

காயத்ரி said...

Ennavendru solvathu ungal kavi thiramaiyai.... viyakka vaikkirathu ungal karpanaiyum kavithaiyum... ungal kavithai varikalil kattundu kidakkindren meela vazhi theriyaamal....