Wednesday, March 1, 2017

என்னவனே ...


என்னவனே ...
அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

No comments: