Friday, February 15, 2008

இருண்ட நாட்கள் ...




நீ
எடுத்து வைத்த
அடிகள் எல்லாம்
என் இதயத்தில்
என்பதாலோ ....
விதிக்கும் சதிக்கும்
எனக்கு
வித்தியாசம்
தெரியாமல் போனது !!!...

நான் உருகுவது
தெரியாதது போல்
நீ
உன் பார்வையை
மாற்றிக்கொண்டதும் !!!...
என்
கண்களை காண
தயங்கி நிற்கையில்
உன் விழிகளில்
கண்ணீர் உறைந்ததும் !!!...
விதியாகிப்போனதுவோ !!!...

இன்று
என் இதயத்தில்
முகம் காண
துடிக்கிறாய் ...
முடியாது பெண்ணே ...
நேற்றைய தெளிந்த
நீரோடை அல்ல அது !!!...

உன்
கபடக்காதலை
அதில் நீயும்
கலக்கியதால் ...
காணாமல் போய்விட்டாய்
கண்ணே ...
என் மனமும்
கலங்கியதால் !!!....

சதியாக நீயும்
என்னில்
சதுரங்கம் ஆடி விட்டாய் !!!...
விதியாக நானும்
வீழ்ந்து விட்டேன்
வீதியிலே !!!...

என்
இதயத்தில் சாய்ந்து
இருட்டாக்கி சென்றவளே !!!...
அணைந்து விட்டாலும்
தழும்பாய்
இன்றும் நீ
தங்கி நிற்கிறாய்
என்னுள்ளே ..

1 comment:

சோபி said...

உங்கள் கவிதையில்
உள்ள ஒவ்வொரு
வரிகளும் மனதை
உருக வைக்கிறது ....

உங்கள் நிழல்கள்
விரைவில் நிஜமாக
எனது வாழ்த்துக்கள்...

"நிஜமான நிழல்கள்"


என்றும் அன்புடன்
நந்தா