Thursday, September 6, 2007

சித்திரம்......



ஓவியத்தை
தானமாக தந்து
உதவிய காயத்ரிக்கு
நன்றிகள் பல.....
அழைத்ததும் ஏனோ?.....
மீண்டும் என்னில்
கலந்ததும் ஏனோ?.....
பூவில் தவழும்
பனித்துளி போல்
என்னில்
உறங்கும் உன்னை
உணர்த்தியதும் ஏனோ?......
என்
கனவுகளை
கலைத்ததும் ஏனோ?......

விரகத்தில்
மூழ்கி எடுத்த
என்
வேதனை முத்துக்களை,
வீட்டுக்குள்
பூட்டி வைத்தேன்,....
அதன்
விலங்குகளை
உடைத்து
வீதிக்கு வர
வித்திட்டதும் ஏனோ?.....
அதை
விலை பேசியதும் ஏனோ?.....

ரத்தத்தில் நனைத்த
மயில் தோகை
கொண்டு சித்திரம்
வரைந்ததும் ஏனோ ?.....
அதை
என் மனதில்
சிலையாக
நிறுத்தியதும் ஏனோ ?....